பத்தாவது சர்வதேச யோகா தினம்
யோக தத்துவம் மற்றும் விஞ்ஞானத்திற்கு உலகம் இப்போது ஆண்டுதோறும் மரியாதை செலுத்துகிறது என்பதை அறிந்துகொள்வதில் பரமஹம்ஸர் மிகவும் மகிழ்ச்சியடைவார், ஏனெனில் காலத்தால் அழியாத யோக தியான உத்திகளை மெய்ப்பொருள் நாடும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதற்கு அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, யோகம் பற்றிய இன்றைய உலக ஆர்வம் பெருமளவு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பரமஹம்ஸ யோகானந்தர் எடுத்துச் சென்ற போதனைகளின் விளைவாகும். “சர்வதேச யோகா தினம் குறித்த இந்தியாவின் யோசனை ஐ.நா. வில் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த பெருமை அமெரிக்காவில் இந்தியாவின் முதல் யோக குரு பரமஹம்ஸ யோகானந்தரையே சேரும்” என்று ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் யோகத்திற்கு அடித்தளம் அமைத்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார்.”
பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.
நிகழ்வுகள் பற்றி
ஜூன் 21 அன்று பத்தாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) உடல், மனம் மற்றும் ஆன்ம நலத்தை மேம்படுத்த அநேக நேரிடை மற்றும் ஆன்லைன் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்தது.
ஆன்லைன் நிகழ்வுகளின் பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆன்லைன் நிகழ்வுகளும்
“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”
(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)
YSS சன்னியாசிகள் பல்வேறு இந்திய மொழிகளில் யோக-தியானம் குறித்த பல அறிமுக அமர்வுகளை நடத்தினர். இந்த அமர்வுகள் குறிப்பாக மெய்ப்பொருள் நாடுவோர் தங்கள் அன்றாட வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலைகளிலும் உள்ளார்ந்த சமநிலையையும் அமைதியையும் எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சரியான அமர்நிலை, ஆரம்ப சுவாச பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக் காட்சி காணல் பயிற்சிகள் உள்ளடக்கிய ஒரு வழிநடத்தப்பட்ட தியானம் பங்கேற்பாளர்களுக்கு நடத்தப்பட்டது.
ஆங்கிலத்தில் நிகழ்ச்சி
(ஸ்வாமி லலிதானந்த கிரி)
இந்தியில் நிகழ்ச்சி
(ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி)
தமிழில் நிகழ்ச்சி
(ஸ்வாமி சுத்தானந்த கிரி)
தெலுங்கில் நிகழ்ச்சி
(ஸ்வாமி கேதாரானந்த கிரி)
கன்னடத்தில் நிகழ்ச்சி
(சுவாமி ஸ்ரேயானந்த கிரி)
பரமஹம்ஸ யோகானந்தர் பற்றி
பரமஹம்ஸ யோகானந்தர் தனது விரிவான போதனைகளால் லட்சக் கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். “மேற்கில் யோகத்தின் தந்தை” என்று பரவலாகக் கருதப்படும் பரமஹம்ஸர், விஞ்ஞான முறை பிராணாயாம (உயிர் சக்தி கட்டுப்பாடு) உத்திகளைக் கொண்ட உலகளாவிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார். யோகத்தின் இறுதி இலக்கு, தன்னை எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆன்மாவாக உணர்வதே ஆகும். யோகானந்தரின் திட்டம் – யோகதா சத்சங்க பாடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது – சமயத்தின் இந்த உள்ளார்ந்த அடிப்படைக்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறது. மேலும் இது ஹத யோகத்தின் சரீர ரீதியான நன்மைகளில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமல்லாமல், தங்கள் மன திறன்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள அதிக மக்களையும் ஈர்க்கும் ஒரு அமைப்பாகும்.
அவரது போதனைகள் மற்றும் அவர் கற்பித்த தியான உத்திகள் இன்று கீழே காண்பவைகள் மூலம் கிடைக்கின்றன:
- யோகதா சத்சங்க பாடங்கள், யோகானந்தரால் உருவாக்கப்பட்ட ஒரு விரிவான வீட்டு கல்வித் தொடர். டிஜிட்டல் செயலியிலும் கிடைக்கிறது
- அவரது போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அவர் நிறுவிய YSS அமைப்பின் புத்தகங்கள், பதிவுகள் மற்றும் பிற வெளியீடுகள்
- நாடு முழுவதும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் சன்னியாசிகள் நடத்தும் சுற்றுப்பயணங்கள், அங்கு அவர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சி, ஒருமுகப்படுத்துதல் மற்றும் விஞ்ஞான யோக தியான உத்திகளை விளக்குகிறார்கள்
- சன்னியாசிகளால் நடத்தப்படும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகள்
- சாதனா சங்கங்கள்
- குழந்தைகளுக்கான தியானம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை பற்றிய நிகழ்ச்சிகள்
மற்றவர்கள் கூறியவை
“நான் பரமஹம்ஸ யோகானந்தரை 1935-ல் கொல்கத்தாவில் சந்தித்தேன். அன்றிலிருந்து அமெரிக்காவில் அவரது பணிகளின் விவரங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இருட்டின் நடுவில் பிரகாசமான ஒளி ஜொலிப்பதைப் போல பரமஹம்ஸ யோகானந்தரின் இருப்பு இவ்வுலகில் இருந்தது. இவரைப் போன்ற தலைசிறந்த ஆத்மா இப்பூவுலகில் அரிதாகவேதான், மானிடர்கள் மத்தியில் உண்மையான தேவை இருக்கும் போது, வருகிறார்.”
இன்று உலகெங்குமுள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃஃபெலோஷிப் மையங்கள் பரமஹம்ஸ யோகானந்தரை செயல்பாடுகளில் பிரதிபலிக்கின்றன. அவை உலகின்மீது அமைதியையும் பேரின்பத்தையும் பொழியும் ஒரு மிகவும் நெருக்கமாகப் பின்னப்பட்ட ஆன்மீகக் காந்த வலையை உண்டாக்கியவாறு தாமாகவே பன்மடங்கு பெருகும்.”
“யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / செல்ஃப்-ரியலைசேஷன் ஃஃபெலோஷிப்பில் (பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது) மிக உயர்ந்த ஆன்மீகம், சேவை மற்றும் அன்பைக் கண்டேன்.”
“நான் இந்த புத்தகத்தை விரும்புறேன். தங்கள் எண்ணங்களையும் சித்தாந்தங்களையும் சவாலுக்கு உட்படுத்தும் துணிச்சல் உள்ள அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல். இந்த புத்தகத்தில் உள்ள ஞானத்தைப் புரிந்துகொள்வதும் செயல்படுத்துவதும் உங்கள் முழு கண்ணோட்டத்தையும் வாழ்க்கையையும் மாற்றி விடும். இறைவனை நம்புங்கள், நல்ல செயல்களைச் செய்துகொண்டே இருங்கள். #அன்புடன் இருங்கள் #நன்றியுடன் இருங்கள் #ஒருவருக்கொருவர் உதவுங்கள்.”
“பரமஹம்ஸ யோகானந்தரை 1930-களில் சிறுவனாக இருந்தபோது இரண்டு முறை சந்தித்தேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவர் எனக்கு ஒரு யோகியின் சுயசரிதம் ஐக் கொடுத்தார்.... நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய கணமே, என்னால் விவரிக்க முடியாத ஒன்றை அது என்னுள் நிகழ்த்தியது. யோகக் கலைப் பற்றி, யோகிகளால் எழுதப்பட்ட பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன்; ஆனால் இந்த புத்தகத்தைப போல அவை ஒருபோதும் என்னை ஈர்த்ததில்லை. இதில் ஏதோ ஒரு மாயாஜாலம் இருக்கிறது”
“நான் ஒரு யோகியின் சுயசரிதம் நூல்களை வீட்டைச் சுற்றி அடுக்கி வைத்திருக்கிறேன், தொடர்ந்து அதை மக்களுக்கு வழங்குகிறேன். மக்கள் தங்களை ‘மாற்றிக் கொள்ள’ தேவைப்படும்போது, இதைப் படியுங்கள் என்று சொல்கிறேன், ஏனென்றால் இது ஒவ்வொரு சமயத்தின் இதயத்தையும் சென்றடைகிறது.”
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பற்றி
கடந்த 100 ஆண்டுகளாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) அதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பரமஹம்ஸ யோகானந்தர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதற்காக 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை நிறுவினார். இந்த சமய சார்பற்ற போதனைகள் முழுமையான வெற்றி மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான ஒரு முழுமையான தத்துவம் மற்றும் வாழ்க்கை முறையையும், அத்துடன் பரம்பொருளுடன் (இறைவன்) ஆன்மத்தின் ஐக்கியம் என்ற வாழ்க்கையின் இறுதி இலக்கை அடைவதற்கான தியான முறைகளையும் உள்ளடக்கியது
பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.