ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் சமயத்தில், கிறிஸ்து-அன்பு மற்றும் ஆனந்தத்தின் அதிர்வுகள் வழக்கத்தை விட வலுவாக விண்ணுலக மண்டலங்களிலிருந்து பூமிக்கு வெளிப்படுகின்றன. இயேசு அவதரித்த போது பூமியில் பிரகாசித்த எல்லையற்ற ஒளியால் வானவெளி நிரப்பப்பட்டது. பக்தி மற்றும் ஆழ்ந்த தியானத்தின் மூலம் ஒத்திசைந்து இருப்பவர்கள் கிறிஸ்து இயேசுவில் உள்ளார்ந்திருந்த எங்கும் நிறைந்த உணர்வுநிலையின் மாற்றும் அதிர்வுகளை வியக்கத்தக்க உணர்வுபூர்வ வழியில் உணர்கிறார்கள்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
கிறிஸ்துமஸ் நன்னாள் புனித சந்தர்ப்பத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் போற்றும் விதமாக டிசம்பர் 25 வியாழக்கிழமையன்று, YSS சன்னியாசி ஒருவரால் சிறப்பு ஆன்லைன் தியானம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி தொடக்கப் பிரார்த்தனை மற்றும் பிரபஞ்ச கீதத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அகத் தூண்டுதல் தரும் வாசிப்பும், சிறிது நேரம் மௌன தியானமும் நடைபெற்றன. மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தியைச் செயல்படுத்துதலுடனும் நிகழ்ச்சி நிறைவடைந்தது; தொடர்ந்து நிறைவுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
கிறிஸ்துமஸை முன்னிட்டு நினைவுத் தியானங்கள் YSS ஆசிரமங்கள், கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் நடத்தப்பட்டன. உங்களுக்கு அருகில் உள்ள ஒரு மையத்தைக் கண்டறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யுங்கள்.
YSS/SRF தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் கிறிஸ்துமஸ் செய்தி
கிறிஸ்துமஸ் ஐ முன்னிட்டு, YSS/SRF தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர் ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களின் ஒரு சிறப்புச் செய்தியைப் படிக்க, கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.
இந்த புனித தருணத்தில் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே பகிரப்பட்டுள்ள இணைப்பு வழியாக அதைச் செய்யலாம். உங்கள் ஆதரவுக்கு ஆழ்ந்த நன்றி.

















