புத்தாண்டு முந்தைய நாள் தியானம்

புதன்கிழமை, டிசம்பர் 31, 2025

இரவு 11:30 மணி (டிசம்பர் 31)

– அதிகாலை 12:15 மணி (ஜனவரி 1)

(IST)

புத்தாண்டு முந்தைய நாள் தியானம் - டிசம்பர் 31, 2025

நிகழ்வு பற்றி

புதிய வருடம்‌ எனும்‌ தோட்டத்தில்‌ நீங்கள்‌ செடிகளை நடுவதற்குப்‌ பொறுப்பாளியானவர்‌ என கற்பனைச்‌ செய்யுங்கள்‌. இந்த மண்ணில்‌ நல்ல பழக்கவழக்கங்கள்‌ எனும்‌ விதையினை விதையுங்கள்‌. கவலைகளையும்‌ கடந்தகால தவறான செயல்கள்‌ எனும்‌ களையினையும்‌ களைந்தெறியுங்கள்‌.

— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர், புத்தாண்டு தொடக்கத்தில் கூட்டு தியானம் செய்வதைத் தொடங்கினார். புத்தாண்டு பிறக்கும் வேளையில் பக்தர்கள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடவும், தீய பழக்கங்களைக் கைவிட்டு நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள உறுதியான சங்கல்பம் மேற்கொள்ளவும் அவர் ஊக்குவித்தார்.

ஒரு சிறப்பு ஆன்லைன் புத்தாண்டு முந்தைய நாள் கூட்டுத் தியானம், புதன்கிழமை, டிசம்பர் 31, இரவு 11:30 மணி முதல் வியாழக்கிழமை, ஜனவரி 1, அதிகாலை 12:15 மணி வரை (IST) நடத்தப்பட்டது. இந்த தியானம் YSS சன்னியாசி ஒருவரால் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது.

புத்தாண்டை தியானத்துடன் வரவேற்கும் இந்தத் தனித்துவமான வழிமுறை, நம் YSS ஆசிரமங்களிலும், சில கேந்திராக்களிலும் மற்றும் மண்டலிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இந்தப் புத்தாண்டு தருணத்தில், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதநேய பணிகளுக்கு பங்களிப்பு ஆற்ற உங்களை வரவேற்கிறோம். நன்கொடை அளிக்க கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர